தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம்
Jun 12 2017 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம், வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுபெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளியதும், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள பிரசித்திிபெற்ற ஸ்ரீபெருந்தேவி நாயகி சமேத வரதராஜபெருமாள் ஆலயத்தில் 31ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோவில் குளத்தில் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவிதாயார், வரதராஜபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த தேர்ப்பவனியில், ஏராளமானோர் கலந்துகொண்டு அந்தோணியாரை வழிபட்டனர்.