திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சிவன்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
Jun 14 2017 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சிவன்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருவாசியில் மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைதொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பாதாள பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டூர் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. யாகசாலை பூஜையைத் தொடர்ந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதனை தரிசித்து வழிபட்டனர்.