திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தையை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம்
Jun 14 2017 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தையை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சாயாபுரம் கிராத்தைச் சேர்ந்த திரு. சென்னகேசவலு என்பவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர், கோயில் முன் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த அவர், அதிகாலை எழுந்து பார்த்த போது தனது ஒரு வயது மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து திருமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையை கடத்திய நபருடன் பெண் ஒருவர் உடனிருந்த காட்சியும் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ளதால், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தம்பதிகளாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.