தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Jun 14 2017 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டுக்கருப்பூரில் சுயம்பு சக்தி மேற்சக்தி அம்மன் கோயிலில் உள்ள மகாசக்தி, சுதர்சன காளிகாம்பாள், மகாலஷ்மி, இரட்டை குபேரர் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோயில் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள ரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதனிடையே, சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலுக்கு பொதுமக்கள் காணிக்கையாக வழங்கிய ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் மாதேமங்கலத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நரசிம்மர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.