திருச்சி கமலவல்லி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கோடை உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Jun 16 2017 6:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 திவ்ய தேசங்களில் இரண்டாவதாக விளங்கும் திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில், கோடை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளிய அம்மன், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் அமைந்துள்ள சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில், வருஷாபிஷேகத்தினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைதொடர்ந்து 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
மழை வேண்டி அரியலூரில் உள்ள ஐந்துமுக விநாயகர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர்.
இதனிடையே, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 46 லட்சத்து 68 ஆயிரத்து 1 ரூபாய் ரொக்கப் பணமும், 510 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 790 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவில் திருப்பணிக்கென 9 லட்சத்து 33 ஆயிரத்து 454 ரூபாய் பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் கள்ளிக்காடு கிராமத்தில் உள்ள செபஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழாவை நடைபெற்ற தேர்பவனி நடைபெற்றது. வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் செபஸ்தியார் மற்றும் ஆரோக்கிய மாதா எழுந்தருளினர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.