கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகாகும்பாபிஷேகம் : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்
Jun 16 2017 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி - புதுப்பேட்டை, சென்னை சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, வாஸ்து சந்தான ஹோமம், கும்ப கலச ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் கும்பக்கலசம் எடுத்து வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு மங்கள வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தைக் காண, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை வழிபட்டனர்.