தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Jun 17 2017 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரெங்கநாதர் கோயிலில், ஸ்ரீ்ரெங்க நாச்சியார் தாயாருக்கான வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று, ரெங்கநாயகி தாயார் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைக்கு பிறகு, திருத்தேரில் எழுந்தருளிய அம்மன், நான்கு ரத வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழ இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.