ஆனி மாத கார்த்திகையையொட்டி திருவாரூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வெள்ளி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
Jun 23 2017 7:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இக்கோயிலில், ஆனி மாத கார்த்திகை விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி வெள்ளி தேரோட்டம் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணியர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள ஆக்கூர் முத்து முனிஸ்வரர் கோயிலில், உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூரில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சீரடி மதுரம் சாய் பாபா கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு, பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சிவன் கோவிலிலிருந்து இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் வழியாக சென்று, பின்னர் கோயிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் சாய் பாபாவிற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.