அசாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் புகழ்பெற்ற அம்புபச்சி திருவிழா தொடங்கியது : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
Jun 23 2017 9:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் புகழ்பெற்ற அம்புபச்சி திருவிழா தொடங்கியது. இந்தவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின், கவுகாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது 'காமாக்யா' திருக்கோயில். அன்னை பார்வதியின் யோனி பீடமாய் சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் நான்கு நாட்கள் நடைபெறும் 'அம்புபச்சி' விழா நேற்று தொடங்கியது. ஆண்டுக்கு ஒருமுறை இவ்விழா நடைபெறுவதால், இங்குள்ள அம்மனை தரிசிப்பதற்காக பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர். சர்ச்சைகள் இன்றி விழா நடைபெற திட்டமிடப்பட்டதை அடுத்து, நாகா சாதுக்களின் நிர்வாண ஊர்வலத்துக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவை நேற்று அம்மாநில முதல்வர் திரு. சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.