தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தனி சன்னதியில் வீற்றிருக்கும் வராஹி அம்மனுக்கு 15-ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா சிறப்பாக தொடங்கியது : இனிப்புகளின் அலங்காரத்துடன் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
Jun 24 2017 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தனி சன்னதியில் வீற்றிருக்கும் வராஹி அம்மனுக்கு 15-ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா சிறப்பாக தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் இனிப்புகளின் அலங்காரத்துடன் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள ப்ரத்யங்கிராதேவி அம்மன் கோயிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பளாயாகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நடைபெற்ற யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிவந்திபட்டி காந்தாரி அம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மழை வேண்டி அம்மனுக்கு கலச பூஜையும், கொடிமரத்தில் நீர் அபிஷேகமும் நடைபெற்றன.
கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர தீர்த்த ஸ்வாகளின் 403-வது ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த ஸ்வாமிகளின் மூல பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், மந்த்ராலய பீடாதிபதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.