சபரிமலை அய்யப்பன் கோயிலில், புதிதாக அமைக்கப்படவுள்ள தங்க கொடிமரத்திற்கான பிரதிஷ்டை நாளை நடைபெறுகிறது
Jun 24 2017 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்காக புதிய தங்க கொடிமரம் தேர்வு செய்யப்பட்டு, பம்பையில் தைலத்தில் ஊறவைக்கப்பட்டு, சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் புதிய கொடிமரம் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனையொட்டி நாளை காலை 11 மணி முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், சபரிமலை அய்யப்பன் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.