திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் தொடங்கியது : சுவாமி தரிசனம் ரத்து
Aug 4 2017 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில், மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவ விழா நேற்று தொடங்கியது. சுவாமிக்கு பட்டு நூல்களால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடத்தப்பட்டன. பவித்ர உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று நாட்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.