தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்ணைக் கவரும் பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
Aug 7 2017 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்ணைக் கவரும் பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 25ம் தேதி நாடுமுழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் இவ்விழா சிறப்பாக நடைபெறவுள்ளதால், பல இடங்களில் விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கிழங்கு மாவு மற்றும் காகித கூழ் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நீரில், கரைக்கும் போது தண்ணீர் மாசுபடாத வகையில் பிரத்யேக வண்ணம் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்படுகின்றன. கற்பக விநாயகர், பஞ்சமுக விநாயகர், சக்தி விநாயகர், தொந்தி விநாயகர், செல்வ விநாயகர் என பல விதமான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.