குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து வெங்கையா நாயுடு திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்
Aug 8 2017 9:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து திரு. வெங்கையா நாயுடு திருப்பதியில் இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரு. வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகபோட்டியிட்ட திரு. கோபாலகிருஷ்ண காந்தி-யை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம் நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக அவர் பொறுப்பேற்றார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திரு. வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.