திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
Aug 12 2017 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.
தமிழ் கடவுளான முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அதிகாலை ஒருமணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை மனமுருக வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேராட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.