திருச்சி மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்
Aug 14 2017 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் குரும்பர் இன மக்களின் சென்னப்பசுவாமி மற்றும் மகாலெட்சுமி அம்மாள் உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா களைகட்டியது. கோயில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தபோது பக்தி கோஷங்கள் முழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பக்தர்கள் பலரும் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். பின்னர், குரும்பர் இன மக்களின் சேர்வை ஆட்டம் நடைபெற்றது.