ஆடிக்கிருத்திகை திருநாளை முன்னிட்டு அனைத்து முருகப்பெருமான் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் : ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள்
Aug 16 2017 9:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடிக்கிருத்திகை திருநாளை முன்னிட்டு இன்று அனைத்து முருகப்பெருமான் கோவில்களிலும் அதிகாலை வேளையில் சிறப்புவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆடிக்கிருத்திகை திருநாளை முன்னிட்டு முருகப்பெருமானின் அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சிறப்பு வழிபாடுகள் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளன. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.