புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவில் களைகட்டிய சந்தனக்கூடு திருவிழா - ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Aug 16 2017 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஏர்வாடி தர்காவில் உருஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிது. இவ்விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்திருக்கும் மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஒலியுல்லா தர்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா சிறப்புக்குரியதாகும். 843-வது சந்தனக்கூடு திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான உருஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா இன்று காலை தொடங்கியது. சின்ன ஏர்வாடி பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தர்காவை 3 முறை வலம்வந்த பிறகு சந்தனக்கூட்டில் இருந்த சந்தனம் மகானின் சமாதியில் பூசப்பட்டது. இந்த விழாவில், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் கலந்துகொண்டனர்.