ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
Aug 16 2017 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில், தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஜந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து முருகப்பெருமானை தரிசித்தனர். இந்நிலையில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா நேற்று துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில், அலங்கரிக்கபட்ட தெப்பத்தில், வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
எர்ணாவூரிலுள்ள திருமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதேபோல், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், 108 சுமங்கலிகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனைதொடர்ந்து வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதனிடையே, அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அடைக்கலமாத தேவாலயத்தில் விண்ணேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடத்தப்பட்ட ஒளிவிழா எனும் குத்துவிளக்கு பூஜையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.