ஆவணித் திருவிழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் குவிந்த பெருந்திரளான பெண்கள் - பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் பெண்களே அபிஷேகங்கள்
Aug 20 2017 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி திரளான பெண்கள் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெருந்திரளான பெண்கள் வருகை தந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகர் சுவாமி சிலைகளுக்கு, பூசாரிகள் இல்லாமல் பெண்களே அபிஷேகங்கள் செய்து, நாகர் சிலைகளுக்கு மஞ்சள் நூலில் தாலி கட்டி வழிபாடு செய்தனர். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மனமுருக வழிபட்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்து வழிபாடு நடத்தினர்.