கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு
Aug 20 2017 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் 63-வது பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி சார்பில், தொழுவூர் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.எ.ஏழுமலை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.