திண்டுக்கல் அருகே 16 அடி உயர தங்கத்தேருக்கு கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
Aug 20 2017 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே 16 அடி உயர தங்கத்தேருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள 108 விநாயகர் மற்றும் 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் விநாயகர் ஆலயங்களில் இல்லாதவகையில், இங்கு 16 அடி உயரம் கொண்ட தங்கத்தேர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டு, தங்கத்தேர் கலசத்திற்கும், தங்க விநாயகருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தரிசனம் செய்தனர்.