திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி திருத்தேரோட்ட நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர்

Aug 21 2017 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆவணி திருவிழாவையொட்டி இன்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தமிழ்க்‍கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்‍கியமானதாக திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணித் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த திருவிழாவின் 10ம் நாளான இன்று, முக்‍கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்‍கு கோயில் நடை திறக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சுவாமி குமரவிடங்க பெருமாள்-வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் வீதிவுலா வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00