நாகை கடலில் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோலாகலம் : ஏராளமான மீனவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Aug 22 2017 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை கடலில் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி, நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, புதிய கடற்கரை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் ஆசிபெற்ற அதிபத்தனார் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் படகில் ஏறி தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக கடலில் வீசினார். இந்த விழாவில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.