திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா இன்று தொடக்கம் - பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு
Sep 23 2017 7:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கவுள்ளதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா இன்று மாலை கொடி ஏற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்க உள்ளது. இதனையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே தற்காலிக மருத்துவமனைகளும், மலைப் பாதையில் 24 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தட்டுப்பாடு இன்றி லட்டுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 650 சி.சி.டி.வி. கேமராக்களும் பொறுத்தபட்டுள்ளன.