திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சக்கர ஸ்நானம் நடைபெற்றது
Oct 1 2017 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக, சக்கர ஸ்நானம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக கோயில் தெப்பக்குளமான புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி உபய நாச்சியார்களுடன் கூடிய மலையப்பசுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள், கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு மாட விதிகள் வழியாக திருக்குளத்தை அடைந்தனர்.
திருக்குளத்தின் அருகில் இருக்கும் வராகசுவாமி கோயில் மண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் சக்கரத்தாழ்வாரை குளத்திற்கு கொண்டு சென்று மூன்று முறை சக்கர ஸ்நானம் நடத்தினர். அப்போது குளத்தின் நான்கு புறங்களிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு புனித நீராடினர். இதைத்தொடர்ந்து உற்சவர்கள் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர்.