கிருஷ்ணகிரியில் 12 தேர்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து தசரா விழாவினை சிறப்பாக கொண்டாடினர்
Oct 1 2017 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் 12 தேர்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து தசரா விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து தசரா விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பழையப்பேட்டை, காந்தி ரோடு, குப்பம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அருள்பாலித்து வரும் மலையப்ப ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணர், கல்கத்தா காளி, அங்காளம்மன், விநாயகர் உள்ளிட்ட 12 கோயில்களின் தேர்கள் அலங்காரம் செய்து, நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பழையப்பேட்டை காந்தி சிலை முன்பு நிறுத்தப்பட்டது. அங்கு விழாவின் முக்கிய நிகழ்வான மரம் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, நெல்லை மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள துர்க்கை அம்மன், தேவி கருமாரியம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், முப்பிடாதியம்மன் உள்ளிட்ட 21 கோயில்களில் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அலங்காரத்தில் அம்மன் சப்பரத்தில் வீதியுலாவும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. சப்பரங்கள் முக்கிய வீதி வழியாகச் கொண்டு செல்லப்பட்டு, டவுன் தேரடி திடலில் அணிவகுத்தன. அங்கு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.