திருச்சி மணப்பாறை அருகே உள்ள பூதநாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்
Oct 5 2017 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அமைந்துள்ள பூதநாயகி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா, கடந்த மாதம் 18ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொன்னூஞ்சல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இறுதியில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை வைத்து பெண்கள் தாலாட்டு பாடினர். இந்தப் பொன்னூஞ்சல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.