திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்று பத்மநாபபுரம் அரண்மனை திரும்பிய சுவாமி விக்ரகங்களுக்கு தமிழக-கேரள போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது
Oct 5 2017 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து தேவாரக்கட்டு சரஸ்வதிதேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை குமாரசாமி ஆகிய சுவாமி விக்ரகங்கள் மற்றும் மன்னரின் உடை வாள் ஆகியவை கடந்த 18-ம் தேதி பாரம்பரிய முறைப்படி கொண்டு செல்லப்பட்டன. 10 நாட்கள் நடைபெற்ற பூஜைகளுக்குப் பின்னர், அந்த விக்ரகங்கள் நேற்று மாலை மீண்டும் பத்மநாபபுரம் அரண்மனைக்கு எடுத்துவரப்பட்டன.
கோட்டை வாசல் அருகில் வந்ததும், சரஸ்வதி தேவிக்கு, பெண்கள் தாலப்பொலியுடன் வரவேற்பு அளித்தனர். தமிழக-கேரள போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.
வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கும், முன்னுதித்த நங்கை சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கும் பல்லக்குகளில் புறப்பட்டனர். தேவாரக்கட்டு கோயில் வாசல் முன்பு, யானையில் இருந்து சரஸ்வதிதேவி விக்ரகத்தை கீழே இறக்கும்போது போலீசார் மரியாதை செலுத்தினர்.