கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா அனைத்து இன்னல்களிலிருந்தும் விடுபட்டு அம்மாவின் மக்கள் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யவேண்டி வாலாஜா பேட்டை படவேட்டம்மன் திருக்கோவிலில் கழகத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு
Oct 7 2017 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அனைத்து இன்னல்களிலிருந்தும் விடுபட்டு அம்மாவின் மக்கள் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யவேண்டி வாலாஜா பேட்டை படவேட்டம்மன் திருக்கோவிலில் கழகத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மறைந்த அம்மாவுக்கு உற்ற துணையாக 33 ஆண்டுகள் தோளோடு தோள்நின்று கழகத்தின் மேம்பாட்டிற்காக உழைத்த கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அனைத்து இன்னல்களிலிருந்தும் விடுபட்டு அம்மாவின் மக்கள் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்யவேண்டி வேலூர் கிழக்கு மாவட்ட வாலாஜாபேட்டை ஒன்றியம் மற்றும் நகரத்தின் சார்பில் வாலாஜாபேட்டை படவேட்டம்மன் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டு கோவிலை ஊர்வலமாக வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் திரு. சி. கோபால், ஒன்றியச் செயலாளர் திரு. செங்காடு கஜேந்திரன், நகரச் செயலாளர் திரு. சுரேஷ் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.