உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சென்னையில் ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயணம்
Oct 8 2017 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சென்னையில் இன்று ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயணம் நடைபெற்று வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அருகே ஸ்ரீதென்னாச்சார்ய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாதம் தாங்கிகள் கைங்கர்ய சபை சார்பில், 20-வது ஆண்டு ஏக தின நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயண நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. உலக நன்மைக்காவும், மழை வேண்டியும் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பாராயணம், இரவு 10 மணியளவில் பூர்த்தியடைகிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய வைணவத் திருத்தலங்களைச் சேர்ந்த ஜீயர் சுவாமிகள், பிரபந்தம் பாராயணம் செய்பவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.