வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

Oct 10 2017 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் இருந்த வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளிக்குப்பம் பூமாலை மலை மீது அமைந்துள்ள பழைமையான முருகன் கோவில் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோயில் நடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்த போது, கோவிலின் பூட்டை உடைத்து 3 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை மற்றும் வள்ளி, தெய்வானை சிலைகள், சேவல் கொடி, வெள்ளி வேல் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கோயில் பொருளாளர் திரு. பர்குணன், ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00