கழக பொதுச்செயலாளர் சின்னம்மா நீடூழி வாழவேண்டும், தமிழகத்தில் அம்மாவின் வழியில் சின்னம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி திண்டுக்கலில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு
Oct 16 2017 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக பொதுச்செயலாளர் சின்னம்மா நீடூழி வாழவேண்டும், தமிழகத்தில் அம்மாவின் வழியில் சின்னம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி திண்டுக்கலில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.
கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் ஆணைப்படி கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆற்றல்மிக்க கழக புதிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து முழுஉடல் நலத்துடன் தியாகத் தலைவி சின்னம்மா நீடூழி வாழவேண்டும், அவரது தலைமையிலான கழக அரசு தமிழகத்தில் அமையவேண்டும் என வேண்டி, திண்டுக்கல் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தினர். என்றென்றும் கழகத்தின் எதிர்காலம் தியாகத் தலைவி சின்னம்மாவின் கைகளிலேயே உள்ளது என்றும் அவரது கரங்களை என்றென்றும் அவருக்கு துணையாக நின்று வலுப்படுத்துவோம் என்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.