திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நாளை தொடக்கம்
Oct 19 2017 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நாளை தொடங்குகிறது.
தமிழ் கடவுளான முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் திகழ்கிறது. இக்கோயிலில் வெகுசிறப்பாக நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை தொடங்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ம் தேதியும், திருக்கல்யாணம் 26-ம் தேதியும் நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி, பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.