தீபஒளி திருநாளையொட்டி சென்னை பார்த்தசாரதி கோவிலில் விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Oct 20 2017 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீப ஒளி திருநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பார்த்தசாரதி சுவாமி மற்றும் மணவாள மாமுனிகளின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், தீப ஒளி திருநாளை முன்னிட்டு, பத்து நாட்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. தீப ஒளி திருநாளான நேற்று, பார்த்தசாரதி சுவாமி மற்றும் மணவாளமா முனிகள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. வீதியில் சுவாமி உலா வரும்போது, ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்தும், கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பியும்ஆரவாரம் செய்தனர்.