பழனி மற்றும் நத்தம் அருகே நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழா : சுவாமிமலையில் கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Nov 24 2017 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி மற்றும் நத்தம் அருகே இன்று நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சுவாமிமலையில் கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட சிவாசாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலாசநாதர், பெரியநாயகி அம்மன் மற்றும் இதர சன்னதிகளில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட மலர்களும், புனித தீர்த்தங்களும் வழங்கப்பட்டன.
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, மலைக்கோவிலிலிருந்து உற்சவ மண்டபத்திலும், படிச்சட்டத்திலும் எழுந்தருளினார். யாகசாலை பூஜைகளுக்குப்பின்னர் யானை உருவம்பொறிக்கப்பட்ட திருக்கார்த்திகை கொடி ஏற்றப்பட்டது.