திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி - 2 பேர் காயம்
Dec 14 2017 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயாபிளஸ் தொலைக்காட்சியில் கடந்த மாதமே திருச்நெந்தூர் கோவில் பிரகாரம் சிதிலமடைந்து உள்ளதாக செய்தி வெளியான நிலையில் தற்போது முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் அங்கு வள்ளி குகைக்கு செல்லும் வழியில் உள்ள பின்புற பிரகார மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி பேச்சியம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, விபத்து குறித்து கேட்டறிந்தார். மேற்கூரை சிதிலமடைந்தது குறித்து கடந்த மாதமே ஜெயாபிளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில் தற்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதையடுத்து பேச்சியம்மாளின் மரணத்திற்கு அரசு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் எனக்கோரி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.