அருமனை கிறிஸ்துமஸ் விழா - ஏற்பாடுகள் தீவிரம் : சிறப்பு விருந்தினராக டிடிவி தினகரன் பங்கேற்கிறார்
Dec 22 2017 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், மறைந்த மாண்புமிகு அம்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இந்த ஆண்டுக்கான விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொள்கிறார். இந்நிலையில், விழாவுக்கு பந்தல் அமைத்தல், அலங்கார தோரணங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழா ஏற்பாடுகளை, கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் திரு.பச்சைமால், அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.