திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற பள்ளியறை அர்த்தஜாம புஷ்பாஞ்சலி விழா : புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீசொக்கரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்தூவி வழிபட்டனர்

Dec 23 2017 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் மார்கழி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பள்ளியறை அர்த்தஜாம புஷ்பாஞ்சலி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீசொக்கருக்கு மலர்தூவி வழிபட்டனர்.

சைவ சமயத்தின் தலைமைபீடமாக விளங்கும், வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் புஷ்பாஞ்சலி விழா முதல் வெள்ளிக்கிழமையான நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் அர்த்தஜாம ஸ்ரீசொக்கர் எழுந்தருள பக்தர்கள் பல்லக்கினை அசைத்து அசைத்து மூலஸ்தான பிரகாரம், வெளிபிரகாரம் ஆகியவற்றின் வழியாக வேதமந்திரங்கள் முழங்க, தேவார, திருவாசக பதியங்கள் பாட பள்ளியறையான ஸ்ரீநீலோத்பலாம்பள் சன்னதியை வந்தடைந்தது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், மற்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் சண்டைகள் அகலும் என்பதால் ஆயிரக்கணக்கான கலந்து கொண்டு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீசொக்கருக்கு மலர்தூவி வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00