வேலூரில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விதிமீறி அதிகப்படியான வசூல் : தட்டிக் கேட்ட கழகத்தினர் மீது வன்முறை வெறியாட்டம்
Dec 24 2017 9:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி வசூல் செய்யும் கும்பல் மீது, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய கழகத்தினரிடம், தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயத்தில் கார்த்திகைத் திருவிழாவையொட்டி குறுகிய கால ஏலம் அறிவிக்கப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் விதிமுறைகளை மீறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகப்படியான கட்டணங்கள் வசூல் செய்து வருகின்றன. மேலும் அப்பகுதி கடைகளிலும் வசூல் செய்து வருகினற்னர். இந்த விதிமீறல் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சித் தலைவர் மறறும் பேரூராட்சி நிர்வாகத்திடம், வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. என்.ஜி. பார்த்திபன் முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வசூல் கும்பல் கடுமையான வார்த்தைகளால் பேசியும், தகாத முறையிலும் நடந்து கொண்டனர். இதுகுறித்து காவல்துறை டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு திரு. என்.ஜி.பார்த்திபன் புகார் மனு கொடுத்துள்ளார்.