சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி, இடைத்தேர்தலில், கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் ஒப்புதலுடன் போட்டியிட்டு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அமோக வெற்றிபெற்றுள்ளதையொட்டி, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார். இதனையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கழகு நிர்வாகிகளும், தொண்டர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துகொண்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதையொட்டி, புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி பரிமாறிக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், ஒட்டப்பிடாரம், 3வது மைல் பகுதி ஆகிய இடங்களில், திரு.டிடிவி தினகரனின் வெற்றியை கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு புறநகர் மாவட்டக் கழகம் சார்பில் சத்யமங்கலம், பெருந்துரை, கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திரு.டிடிவி தினகரனின் வெற்றியை கொண்டாடினர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் வெற்றி கொண்டாடும் வகையில், ராமநாதபுரத்தில் கழகத்தினர் அரண்மனை முன்பிருந்து முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை பின்னுக்குத்தள்ளி, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அமோக வெற்றிபெற்றுள்ளதற்காக அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் பம்பையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றதையொட்டி, திருச்சியில் கழக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் எதிரே பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் அமோக வெற்றியை நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.