கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
Jan 3 2018 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் துரோக ஆட்சி அகன்று, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி, உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் துரோக ஆட்சி அகன்று, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டி சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதுரைவீரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் திரு. ஜெயபால், மகளிரணி இணைச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.