திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இராப்பத்து திருநாளின் 8ம் திருநாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது
Jan 6 2018 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இராப்பத்து திருநாளின் 8ம் திருநாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து திருநாளின் எட்டாம் திருநாளான்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டார்.
ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள மணல்வெளிப் பகுதியில் நம்பெருமாள் வையாளி நடந்தது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இந்த வையாளி வைபவம் நடந்ததை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்தனர்.
இதையடுத்து திருமங்கை மன்னன் மற்றும் அவரைச் சேர்ந்தோர் கொள்ளையடித்துச் செல்லும் காட்சி அரங்கேறியது. இறைவனிடமே கொள்ளையடித்ததை உணர்ந்து திருமங்கைமன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபவமும் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்பெருமாள் மன்னனை மன்னித்து ஆழ்வார்களில் ஒருவராக திருமங்கையாழ்வாராக ஏற்றுக் கொண்டார் என்பது ஐதீகம். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.