சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 31-ம் தேதி திருப்பதி கோயில் 10 மணிநேரம் மூடப்படும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு
Jan 16 2018 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருப்பதி கோயில் 10 மணிநேரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானியல் அரிய நிகழ்வான சந்திர கிரகணம் வரும் 31ம் தேதி நிகழவுள்ளது. மாலை 5.18 மணிக்கு தொடங்கி, இரவு 8.41 மணி வரை இது நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில், அன்றைய தினம் காலை 11 மணி முதல், இரவு 9.30 மணி வரை 10 மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.