தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர் : உயிர்நீத்த தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு

Jan 16 2018 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் புனித நீராடினர். உயிர்நீத்த தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

தை அமாவாசை தினத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்‍கமான மரபாக இருந்து வருகிறது. இன்று தை அமாவாசை தினம் என்பதால் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற அக்‍னிதீர்த்த கடலில் அதிகாலையிலேயே பொதுமக்‍கள் பல்லாயிரக்‍கணக்‍கில் திரண்டு புனித நீராடினர். மறைந்த தங்களது முன்னோர்களின் நினைவாக அவர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் இந்நாளையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதபுரசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமியும், அம்மனும் அலங்கரிக்‍கப்பட்ட பல்லக்‍கில் புறப்பட்டு அக்‍னி தீர்த்தத்தில் தீர்த்தவாரி கொடுத்தனர்.

நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்‍கரையில் உள்ள குறுக்‍குத்துறை பகுதியில் ஆயிரக்‍கணக்‍கில் திரண்ட பொதுமக்‍கள், தங்கள் முன்னோர்களை நினைத்து புனித நீராடினர். அங்கு பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளையும் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00