அம்மாவின் ஆட்சி தொடர வேண்டி சிறப்பு வழிபாடு : கழக நிர்வாகிகள் பங்கேற்பு
Feb 19 2018 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழகத்தையும், துரோகிகளிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு அம்மாவின் ஆட்சி தொடர வேண்டி மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள கஸ்பா முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் கோவலில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் துரோகிகளிடம் இருந்து கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுத்து மக்களின் ஆதரவுடன், அம்மாவின் ஆட்சியை தொடர வேண்டியும், கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா பூரண நலத்துடன் இருக்க வேண்டியும், மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள கஸ்பா முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் திரு. பாண்டியன் உள்ளிட்டோர் முடிகாணிக்கை செலுத்தினர். இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.