திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது

Mar 14 2018 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி பெருவிழா கடந்த 7-ம் தேதி வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஏராளமான நாதஸ்வர - தவில் வித்வான்கள் ஒன்றிணைந்து இசைத்த, மல்லாரி இசை வழிபாட்டுடன் ராஜகோபால்சுவாமி வீதிஉலா நடைபெற்றது. தங்க, வைர ஆபரணங்களுடன், வண்ண மலர்களால் அலங்கரிப்பட்ட சுவாமி கோயிலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

108 திவ்ய தேசங்களில் இரண்டாவதாக விளங்கும் உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண மின்விளக்குகளாலும், மலர்களாலும், அலங்கரிக்கப்பட்ட அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கரூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில், உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஆயிரத்து எட்டு குத்து விளக்கு பூஜை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கருப்பண்ணசாமி, துர்கை, மாரியம்மன், சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00