திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Mar 22 2018 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில், ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா, வருகிற 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நேற்று மாலை கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.