திருத்தணி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு
Apr 12 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருத்தணி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி நகர கழகம் சார்பில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்ட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.டி.எ.ஏழுமலை நகர கழகச் செயலாளர் திரு.கருணாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த இரா.புதுப்பட்டி துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோவிலில், தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், அங்கப்பிரதட்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி, திருத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.