மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் - பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
Apr 18 2018 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் மலர்கள் தூவி கொடிக்கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 30-ம் தேதி
நடைபெறவிருக்கிறது.